தமிழ்நாடு

காமாலை கண்களுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்- ராகுல் பேட்டி குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2023-03-25 08:41 GMT   |   Update On 2023-03-25 08:44 GMT

சென்னை:

ராகுல் பேட்டி குறித்து பா.ஜனதா முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

மோடியின் கண்களில் பயத்தை பார்த்ததாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார். காமாலை கண்களுக்கு பார்த்ததெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். தன்னுடைய எதிர்காலம் பாழாகி போகும் என்ற அச்சத்தின் வெளிப்பாடு தான் இது.

ஒரு காலத்தில் சட்டத்துக்கு மேலாக, தான் நடக்க முடியும் என்று தன்னுடைய பாட்டி இந்திரா இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மேலாகவும், சட்டத்துக்கு மேலாகவும் நிற்க முடியும் என்ற அகம்பாவத்தின் படி நடந்து காட்டினார். அவர் விட்டு சென்ற எச்சம், சொச்சத்தின்படி ராகுல் நடக்க நினைக்கிறார். அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

பாராளுமன்றத்தின் உள்ளே ஒன்று வெளியே ஒன்று என இரண்டு விஷயங்கள் உள்ளன. பாராளுமன்றத்துக்குள் பா.ஜனதா ஒரு கேள்வி கேட்கிறது. அதற்கு பதில் சொல்ல தயாரில்லை. குழப்பத்தை உருவாக்குகிறார்கள். பாராளுமன்றத்துக்குள் ராகுல் தனக்கு தனி சலுகை எதிர்பார்த்தால் விதிகள் அனுமதிக்காது.

பாராளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதை யார் தடுப்பார்கள். காங்கிரஸ் காழ்ப்புணர்ச்சி, பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News