தமிழ்நாடு செய்திகள்

பீடி பற்ற வைத்த போது உடையில் தீ பிடித்ததில் முதியவர் உடல் கருகி பலி

Published On 2022-09-14 11:33 IST   |   Update On 2022-09-14 11:33:00 IST
  • புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் வடிவேலு.
  • பீடி பற்ற வைத்த போது உடையில் தீ பிடித்ததில் முதியவர் உடல் கருகி இறந்து போனார்.

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது80). இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் இவர் தனிமையில் வசித்து வந்தார்.

இவருக்கு உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய உதவிகளை சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரில் வசிக்கும் இவரது மருமகள் கலா மற்றும் பேரன் விஜயகாந்த் ஆகியோர் செய்து வந்தனர்.

வடிவேலுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதற்கிடையே வயது முதிர்ச்சி காரணமாக வடிவேலுக்கு பார்வை குறைபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வடிவேலு வீட்டில் பீடி பற்றவைத்த போது தீக்குச்சி இவரது உடையில் விழுந்து தீபிடித்தது.

தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலியால் வடிவேலு அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரது மருமகள் கலாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலா மற்றும் அவரது மகன் விஜயகாந்த் ஆகியோர் விரைந்து வந்து வடிவேலை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை வடிவேலு பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது பேரன் விஜயகாந்த் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News