தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 29-ந்தேதி நடக்கிறது
- ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
- வருகிற 29-ந்தேதி எழும்பூர் பைஸ் மகாலில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வருகிற 29-ந்தேதி எழும்பூர் பைஸ் மகாலில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.