தமிழ்நாடு செய்திகள்

மேலும் 4 நாட்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும்- 17 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை

Published On 2022-11-02 10:38 IST   |   Update On 2022-11-02 10:38:00 IST
  • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
  • சில இடங்களில் மிதமானதாகவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, நவ.2-

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.

மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. ஓரளவு தண்ணீர் தேங்கி னாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.

ஆனால் உட்புற சாலை கள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மோட்டார் கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள் ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.

சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.

சென்னையை பொறுத்த வரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1-ந் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் மிதமானதா கவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள வானிலை முன்னறி விப்பில் கூறி இருப்பதா வது:-

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறப் பட்டுள்ளது.

கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சுநிற அலர்ட் கொடுக் கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் வருமாறு:-

சென்னை, செங்கல் பட்டு, காஞ்சீபுரம், ராணிப் பேட்டை, வேலூர், திருவண் ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட் டங்களில் இன்று 2-வது நாளாக பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை விடப் பட்டு உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் வசிப் பவர்கள் கவனமாக இருக் கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்கள்.

சென்னை மாநகர பகுதி யில் 19,500 ஊழியர்கள் வெள்ள நிவாரண பணி களில் ஈடுபட்டுள்ளார்கள் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குதல், தேங் கிய தண்ணீரை மோட்டார் கள் மூலம் அகற்றும் பணி களை செய்து வருகிறார்கள்.

கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

நுங்கம்பாக்கத்தில் நேற்று காலை வரை 8 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை அதை விட அதிகமாக பெய்துள் ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 12.9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் மீனம் பாக்கத்தில் 10.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

Tags:    

Similar News