தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 389 கனஅடியாக சரிவு

Published On 2024-05-30 10:07 IST   |   Update On 2024-05-30 10:07:00 IST
  • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
  • இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

நேற்று முன்தினம் 1,432 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் சரிந்து 795 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 389 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 47.31 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு மேலும் சரிந்து 47.04 அடியானது.

இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News