தமிழ்நாடு

தாகத்துக்கு தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த 9 வயது சிறுமி பலி

Published On 2023-06-16 08:15 GMT   |   Update On 2023-06-16 12:31 GMT
  • தண்ணீர் என நினைத்து சிறுமி ஸ்பிரிட் குடித்து இறந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அகல்யா(வயது9). இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதற்காக மேல் சிகிச்சை பெற கடந்த சில நாட்களுக்கு முன்பு அகல்யா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிறுமியின் தாய் அவரை கவனித்து வந்தார்.

இன்று காலை அகல்யாவுக்கு தாகம் எடுத்துள்ளது. அப்போது அருகில் இருந்த அவரது தாய் தண்ணீர் என நினைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை (மருத்துவ தேவைக்காக வைக்கப்பட்டிருந்தது) அகல்யாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை அருந்திய அகல்யாவுக்கு சிறிது நேரத்தில் உடல்நிலை மோசமானது. உடனே டாக்டர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அகல்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தண்ணீர் என நினைத்து சிறுமி ஸ்பிரிட் குடித்து இறந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News