தமிழ்நாடு

மாயமான பல்கலை விடைத்தாள்கள்- பழைய பேப்பர் கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

Published On 2022-06-25 13:07 GMT   |   Update On 2022-06-25 13:07 GMT
  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பிய விடைத்தாள்கள்.
  • பல்கலைக்கழக வளாக அறையில் இருந்த விடைத்தாள்கள் ஜன்னல் வழியாக திருட்டு.

காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைநிலைக் கல்வி படிப்புக்கான ஆன்லைன் தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. மாதத்தில் மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விரகனூரில் பழைய பேப்பர் குடோனில் விடைத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

மதுரையில் பழைய பேப்பர் கடையில் இருந்து பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், விசாரணையில் பல்கலைக்கழக வளாக அறையில் இருந்த விடைத்தாள்கள் ஜன்னல் வழியாக ஆடு மேய்க்கும் சிறுவர்கள் திருடப்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

காணாமல்போன விடைத்தாள்கள் மீட்கப்பட்ட நிலையில், அதுபற்றி விரிவாக விசாரிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News