தமிழ்நாடு செய்திகள்

வேலூர் ஜெயிலில் தீபாவளி கொண்டாட பரோல் கேட்டு கைதிகள் மனு

Published On 2022-10-12 11:01 IST   |   Update On 2022-10-12 11:01:00 IST
  • தீபாவளி பண்டிகைக்கு பரோலில் செல்ல அனுமதி கோரி கைதிகள் மனு அளித்து வருகின்றனர்.
  • கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான கைதிகள் மட்டும் பரோலில் சென்றனர்.

வேலூர்:

வேலூர் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆண்டுதோறும் தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பரோலில் செல்ல அனுமதி கோரி கைதிகள் மனு அளித்து வருகின்றனர்.

இவர்களுடைய மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்படும். வழக்கமாக தீபாவளி பண்டிகை காலத்தில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான கைதிகள் மட்டும் பரோலில் சென்றனர்.

இந்த ஆண்டு தகுதி அடிப்படையில் கைதிகள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News