தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-08-05 07:05 GMT   |   Update On 2023-08-05 07:05 GMT
  • கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது படிப்படியாக குறைக்கப்பட்டது.
  • நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல்:

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆணைகள் அதனுடைய முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டது. இந்த நீர் வரத்தால் கடந்த வாரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 21,000 கன அடி வரை அதிகரித்தது. இதனிடையே கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது படிப்படியாக குறைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை நிலவரப்படி 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags:    

Similar News