தமிழ்நாடு செய்திகள்

மரம் அகற்றும் பணியில் ஊழியர்கள்.


காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பலத்த மழையால் மரம் சரிந்து விழுந்தது

Published On 2022-10-10 12:12 IST   |   Update On 2022-10-10 12:12:00 IST
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.
  • காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே மழை நீர் செல்ல வழியில்லாததால் தேங்கி நிற்கிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே மழை நீர் செல்ல வழியில்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வந்தவாசி சாலையில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் அதன் அருகில் இருந்த 5 கடைகளில் மேற்கூரை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சரிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வந்தவாசி - காஞ்சிபுரம் முக்கிய சாலை வழியாக செல்லும் வாகனங்கள் ஒரிக்கை வழியாக திருப்பி விடப்பட்டது. மரம் சரிந்து விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பப்பட்டது.

Similar News