தமிழ்நாடு

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை - தமிழக ஆளுநர் விளக்கம்

Published On 2022-09-24 03:45 GMT   |   Update On 2022-09-24 03:45 GMT
  • துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள்.
  • மேற்கு வங்கத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது வரை பல்கலைக்கழகங்களில் வேந்தரான தமிழக கவர்னருக்கு இருந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தரை தேர்வு செய்ய தேவைப்படும் போது பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

இதேபோல் மேற்கு வங்கத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கவர்னருக்குப் பதில், பல்கலைக்கழக வேந்தராக முதல்-அமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News