தமிழ்நாடு செய்திகள்

மீட்கப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.

நொய்யல் ஆறு வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 வாலிபர்கள்: தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்

Published On 2023-11-24 10:02 IST   |   Update On 2023-11-24 12:27:00 IST
  • சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
  • நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

திருப்பூர்:

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5மணி நேரம் போராடி கயிறு மூலம் 4 வாலிபர்களையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் எதற்காக நொய்யல் ஆற்றுக்கு சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News