தமிழ்நாடு செய்திகள்

கூட்டுறவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2023-08-29 12:52 IST   |   Update On 2023-08-29 12:52:00 IST
  • கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • காஞ்சிபுரம் மாவட்ட சங்கத்தின் தலைவர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே தமிழ்நாடு வங்கியை உருவாக்கக் கோரியும், மாவட்ட, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20சதவீத ஊதிய உயர்வு வழங்கக் கோரியும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மத்திய, பெரிய காஞ்சிபுரம், நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மாநில சங்க பொதுச்செயலாளர் சர்வேசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட சங்கத்தின் தலைவர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News