தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது போல ஒத்திகை

Published On 2023-09-15 07:40 GMT   |   Update On 2023-09-15 07:42 GMT
  • சென்னையில் இன்று 7 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது.
  • பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் இறங்கி ஒத்திகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் ஆண்டு தோறும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று 7 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது.

தேசிய பாதுகாப்பு படையினர், சென்னை மாநகர போலீசார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஒத்திகை நடைபெறும் இடங்கள் மிகவும் ரசியமாக வைத்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் மாலையில்தான் ஒத்திகை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் மாநகராட்சி கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது போன்று பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினர். இதற்காக பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் இறங்கி ஒத்திகை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மற்ற இடங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News