தமிழ்நாடு

புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன் பறிமுதல்

Published On 2023-05-17 07:16 GMT   |   Update On 2023-05-17 07:16 GMT
  • புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர்.
  • கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

செங்குன்றம்:

புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் புழல் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் கார்த்திக், சையது இப்ராகிம் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தண்டனை பிரிவு கைதிகளின் கழிவறையில் கேட்டபாரற்று கிடந்த செல்போனையும் கைப்பற்றினர். போலீசார் ரோந்து வருவதை கண்டதும் செல்போனை பயன்படுத்திய கைதிகள் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News