தமிழ்நாடு

மின்கட்டண உயர்வு- தமிழகம் முழுவதும் பா.ஜனதா இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-23 08:31 GMT   |   Update On 2022-07-23 08:31 GMT
  • சென்னையில் இன்று 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் மாவட்ட தலைவர் கபிலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை:

மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன் படி 60 கட்சி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் இன்று 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் மாவட்ட தலைவர் கபிலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர்கள் எஸ்.முத்தையா, ஆர்.பி.சரவணன், இளமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ்நிலையம் அருகே சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், செயலாளர் சதீஷ்குமார், பாஸ்கரன், நடிகை ஜெயலட்சுமி, பொது செயலாளர்கள் தியாகராஜன், சுப்பிரமணிய ரெட்டியார், சுஜாதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தண்டையார்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில பிரசார பிரிவு தலைவர் குமரிகிருஷ்ணன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.பி. சுந்தரராஜன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முருகவேல் மற்றும் நிர்வாகிகள் ஆர்.யு.எஸ்.ரெட்டி, கோவிந்தராஜன், ராமையா, வன்னியராஜன், டில்லி பாபு, சுரேஷ்குமார், பூபால குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் வேளச்சேரி காந்தி ரோட்டில் மாவட்ட தலைவர் சாய் சத்யன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் சுமதி வெங்கடேசன், பொதுச் செயலாளர் முத்து மாணிக்கம், வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு மாவட்ட தலைவர் திருப்புகழ், கேன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வில்லிவாக்கம் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர், செயலாளர் பரிமளா சம்பத், மாவட்ட பொதுச்செயலாளர் லதா சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் வினோஜ் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News