தமிழ்நாடு

இன்று இரவு பராமரிப்பு பணி: கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை ரத்து

Published On 2022-08-05 08:30 GMT   |   Update On 2022-08-05 08:30 GMT
  • இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஒரு பகுதியாகவும் முழுமையாகவும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • இன்று இரவு 8.25 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடில் இருந்து வேளச்சேரி புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை- வேளச்சேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

மின்சார ரெயில் பயணிகளின் பாதுகாப்பை கருதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொறியியல் பணிகள், சிக்னல், வழித்தடம் சரி பார்த்தல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மின்சார பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கின்றன.

இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஒரு பகுதியாகவும் முழுமையாகவும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று இரவு 8.25 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடில் இருந்து வேளச்சேரி புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை- வேளச்சேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 8.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை- வேளச்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரவு 10.50 மணி, இரவு 11.1 மணிக்கு புறப்படும் வேளச்சேரி-கடற்கரை இடையேயான மின்சார ரெயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே சென்னை டிவிசன் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News