தமிழ்நாடு
அம்பத்தூர் பகுதியில் ஆவின் பால் சப்ளை 6-வது நாளாக பாதிப்பு
- மழை நீர் புகுந்ததால் ஆவின்பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
- சீரமைப்பு பணிகள் நடைபெற்று பால் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பட்டரவாக்கம் பால்பண்ணையில் மழை நீர் புகுந்ததால் ஆவின்பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று பால் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.
எனினும் அம்பத்தூர், கள்ளிகுப்பம், ஒரகடம், பாடி, புதூர், மண்ணூர் பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் சப்ளை 6-வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.