தமிழ்நாடு

சிவகாசி அருகே 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுப்பு

Published On 2023-04-16 03:27 GMT   |   Update On 2023-04-16 03:27 GMT
  • சிவகாசி அருகே 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
  • முன்னோர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் தெரிவித்தார்.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளின் 9 நாட்கள் முடிவில் இதுவரை சுடுமண் புகைப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த முன்னோர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

2-ம் கட்ட அகழாய்வில் இன்னும் பல குழிகள் தோண்ட இருப்பதால் முதல்கட்ட அகழாய்வில் கிடைத்ததை விட, பண்டைய கால பொருட்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News