தமிழ்நாடு

மெரினா கடற்கரையில் 1 அடி உயர கற்சிலை மீட்பு: கோவிலில் திருடப்பட்டதா?

Published On 2023-08-31 07:23 GMT   |   Update On 2023-08-31 07:23 GMT
  • கருங்கல்லினால் ஆன சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
  • மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீசார் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை:

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சாமி சிலைகளை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து பழங்கால சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் 2 பழங்கால சாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லினால் ஆன இந்த சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சிலைகளை மீட்டு அப்பகுதியைச் சேர்ந்த தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் மெரினா போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு அடி உயரமுள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீசார் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்தப் பழமையான சிலைகளை கோவில்களில் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News