தமிழ்நாடு

ஊத்துக்கோட்டை அருகே குடோனில் பதுக்கி வைத்த 50 மூட்டை குட்கா பறிமுதல்

Published On 2023-10-11 08:00 GMT   |   Update On 2023-10-11 08:00 GMT
  • தாராட்சி கிராமத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  • வியாபாரி மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடையில் குட்கா, புகையிலை விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து வியாபாரி மணிகண்டனுக்கு சொந்தமான குடோனில் ஆய்வு செய்தபோது 50 மூட்டைகளில் குட்கா, புகையிலை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இது தொடர்பாக வியாபாரி மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News