தமிழ்நாடு

7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை- காதல் கணவர் வெறிச்செயல்

Published On 2022-08-26 02:51 GMT   |   Update On 2022-08-26 02:51 GMT
  • 7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார்.
  • தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கணவர் அற்புதராஜிடம் சக்தி கூறியுள்ளார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் (வயது 20). இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த லதா மகள் சக்தி (18) என்ற பெண்ணும் காதலித்தனர். இதில் சக்தி கர்ப்பமானார். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கணவர் அற்புதராஜிடம் சக்தி கூறியுள்ளார். அதற்கு அற்புதராஜ், ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது என்றும், தற்போதுள்ள நிலைமையில் வளைகாப்பு நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அற்புதராஜ் சக்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் அற்புதராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News