காஞ்சிபுரத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
- நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் நாளை (3-ந்தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் பள்ளிகள் என மொத்தம் 731 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த குழந்தைகள் உள்ளிட்டோர் போலியோ சொட்டு மருந்து போட்டு பயன் பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.