தமிழ்நாடு செய்திகள்

கம்பரசம் பேட்டையில் போலீஸ் ஏட்டு மர்ம மரணம்

Published On 2023-11-01 11:48 IST   |   Update On 2023-11-01 11:48:00 IST
  • நள்ளிரவு வீட்டின் மாடியில் இருந்து மூர்த்தி தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
  • தவறி விழுந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தாரா? என உறுதிப்படுத்தப்படவில்லை.

திருச்சி:

திருச்சி கம்பரசம் பேட்டை வெள்ளான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆர். மூர்த்தி (வயது 48) இவர் சமயபுரம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல் டூட்டிக்கு சென்ற அவர் மாலை வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நள்ளிரவு வீட்டின் மாடியில் இருந்து மூர்த்தி தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

தவறி விழுந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தாரா? என உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூர்த்திக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தஞ்சாவூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருச்சி மாநகர குற்றப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மரியா என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

போலீஸ் ஏட்டு மர்மமாக இறந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும் அந்தப் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News