தமிழ்நாடு செய்திகள்

பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையங்களில் ரூ.14 கோடியில் குட்ஷெட் யார்டு - நாளை தொடக்கம்

Published On 2024-03-11 12:47 IST   |   Update On 2024-03-11 12:47:00 IST
  • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது.
  • வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம்.

தஞ்சாவூா்:

பிரதமர் மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், புதிய குட்ஷெட் யார்டுகள் போன்ற ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார்.

இதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள 44 ரெயில் நிலையங்களில் 60 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ரூ.7 கோடி மதிப்பில் 2 குட்ஷெட் யார்டுகள் மற்றும் திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள மருந்தகமும் அடங்கும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது. இதுவரை 28.5 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

திருத்துறைப்பூண்டி குட்ஷெட் யார்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கி இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன.

வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம். மேலும் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது.

இத்தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News