தமிழ்நாடு செய்திகள்

தேனியில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

தேனியில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

Published On 2022-06-15 10:05 IST   |   Update On 2022-06-15 10:05:00 IST
  • அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும். இது அம்மாவின் கட்டளை.
  • ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

தேனி:

சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த கோஷம் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தலைமை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும். இது அம்மாவின் கட்டளை, கட்சியை வழிநடத்த தகுதியான தலைமை என்ற பல்வேறு வாசகங்களுடன் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் அ.ம.மு.க.வை சேர்ந்த ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News