தமிழ்நாடு

கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்- நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Published On 2022-08-13 07:19 GMT   |   Update On 2022-08-13 07:19 GMT
  • கொளத்தூரில் மாணவ - மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
  • ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி அழகுபடுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை:

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1546 மாணவ-மாணவிகள், தொகுதியில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.

இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மேயர் பிரியா,கமிஷனர் ககன் தீப்சிங்பேடி, எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, ஐ.சி.எப்.முரளி, தேவஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் பள்ளிசாலையில் புதிதாக கட்டப்பட உள்ள சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி சிங்காரச் சென்னை 2.0 நிதியில் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

200 அடி சாலையில் இருந்து தணிகாசலம் நகர் கால்வாயில் இணைக்கும் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

நீர்வள ஆதாரத் துறையின் மூலம் கொளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி அழகுபடுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

சீனிவாசா நகர் சென்னை ஆரம்ப பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். ஜி.கே.எம்.பிரதான சாலை, 33-ஆவது தெரு சந்திப்பில், புதியதாக கட்டப்பட உள்ள 16-ம் நாள் காரியக் கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

பெரியார்நகர் புறநகர் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு உள்ள 4 அறுவை அரங்கம் மற்றும் ஆய்வகத்தினை திறந்து வைத்து பிராணவாயு உற்பத்திக்கலனை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News