அமைச்சர் சேகர்பாபு
5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்
- அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
- கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலி காட்சி மூலமாக அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இத்திட்டத்தினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி மூலமாக அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கவிதா, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் விஜயகுமார் ரெட்டி, உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, ஆறுமுகம், மருதமுத்து, இணை ஆணையர் திருப்பணி ஜெயராமன், கோவில் இணை ஆணையர் காவேரி கலந்து கொண்டனர்.