தமிழ்நாடு செய்திகள்

திராவிடமும் இஸ்லாமும் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

Published On 2022-12-18 10:24 IST   |   Update On 2022-12-18 10:24:00 IST
  • இந்தியாவில் ஏற்றுமதியை பொறுத்துவரை அந்நிய செலாவணியை ஈட்டுவதில் ஆம்பூர் முதலிடத்தில் உள்ளது.
  • காலகாலமாக நாங்கள் அண்ணன்-தம்பியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிலதிபர்கள், தென்னிந்திய காலணி உற்பத்தி யாளர்கள் சங்கம், ஆம்பூர் தோல் சுத்திகரிப்பு நிலையம் சார்பில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

"இந்தியாவில் ஏற்றுமதியை பொறுத்துவரை அந்நிய செலாவணியை ஈட்டுவதில் ஆம்பூர் முதலிடத்தில் உள்ளது.

இங்கிருந்து ஏறத்தாழ ரூ.2,500 கோடிக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகிறது. இந்தியா, தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு ஆம்பூர் உந்துசக்தியாக இருக்கிறது.

திராவிடத்தையும் இஸ்லாத்தையும் பிரித்து பார்க்க முடியாது

திராவிடத்தையும் இஸ்லாத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஒரு நாணயத்தின் ஒரு பகுதி திராவிடம் மற்றொரு பக்கம் இஸ்லாமாக இருக்கும். அதை பிரிக்க முடியாது. காலகாலமாக நாங்கள் அண்ணன்-தம்பியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆம்பூர் இடைத்தேர்தல் வந்தபோது ரெட்டித்தோப்பு பாலம் குறித்து கோரிக்கை வைத்தார்கள். நாங்கள் தேர்தல் கால அறிக்கையில் கூறியபடி நிறைவேற்றுவோம்.

அதேபோல், ஆம்பூர் வளர்ச்சிக்காக தேவைப்படும் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக விரைவில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அவற்றை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News