தமிழ்நாடு
மேட்டூர் அணை நீர்மட்டம் 59.73 அடியாக உயர்வு
- நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 415 கனஅடியாக குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 415 கனஅடியாக குறைந்தது.
அணையின் நீர்மட்டம் 59.73 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 24.48 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.