தமிழ்நாடு செய்திகள்

மீஞ்சூர் குடிநீர் நிலையத்தில் பராமரிப்பு: 4 மண்டலங்களுக்கு 28-ந்தேதி வரை குடிநீர் சப்ளை நிறுத்தம்

Published On 2022-11-25 14:57 IST   |   Update On 2022-11-25 14:57:00 IST
  • மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், நாளை முதல் 28-ந்தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
  • அவசர குடிநீர் தேவைக்கு, அந்தந்த குடிநீர் வாரிய வார்டு பொறியாளர் மற்றும் பகுதி பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை:

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், நாளை முதல் 28-ந்தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.

அவசர குடிநீர் தேவைக்கு, அந்தந்த குடிநீர் வாரிய வார்டு பொறியாளர் மற்றும் பகுதி பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-4567 4567 என்ற புகார் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News