தமிழ்நாடு

ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வாய்தவறி பேசிய திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2023-07-20 16:06 GMT   |   Update On 2023-07-20 17:30 GMT
  • அருகில் இருந்த கட்சிக்காரர்கள் கவனித்து, அவரிடம் எடுத்துச் சொன்னதும், அய்யய்யோ வார்த்தை தவறிவிட்டது என்றார்.
  • ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் நாகல் நகரில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, "தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்" என வாய்தவறி உளறினார்.

இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் கவனித்து, அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். இதையடுத்து சுதாரித்த திண்டுக்கல் சீனிவாசன் தவறை திருத்தி பேசினார்.

"அய்யயோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது. ஸ்டாலினை தோற்கடித்து எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் ஆக்கி காட்டுவோம் என நமது தாய்மார்கள் தெரிவித்திருக்கிறார்கள்" என்றார் திண்டுக்கல் சீனிவாசன். 

Tags:    

Similar News