தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் வந்த கொல்கத்தா டாக்டர் "திடீர்" உயிரிழப்பு

Published On 2023-11-07 14:53 IST   |   Update On 2023-11-07 14:53:00 IST
  • தனியார் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மருந்து கம்பெனி 2 நாட்கள் மருத்துவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியது.
  • டாக்டர் புத்ததேஷ்வா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மருந்து கம்பெனி 2 நாட்கள் மருத்துவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக கல்கத்தாவை சேர்ந்த டாக்டர் புத்ததேஷ்வா (வயது70) வந்திருந்தார். அவர் தனது அறையில் இருந்தபோது திடீரென இறந்தார்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News