தமிழ்நாடு
- ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.
- கரூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இணக்கம் இல்லாத நிலையும் இருக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணியின் வெற்றிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். பின்னர் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் வெடித்தது.
அப்போதே மீண்டும் தி.மு.க. கூட்டணியில் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று பேச்சு அடிப்பட்டது. அது விரைவில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.
ஆகவே தனக்கான ரூட்டில் சென்று காதும் காதும் வைத்தர்போல் மீண்டும் கரூர் தொகுதியை பெற்று அனைவரையும் வியக்க வைப்பார் என்று அம்மணியின் தீவிர ஆதரவு கதர் சட்டைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரம் கரூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இணக்கம் இல்லாத நிலையும் இருக்கிறது.