தமிழ்நாடு செய்திகள்

சென்னை தொழில் அதிபர் வீட்டில் 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு

Published On 2024-01-23 13:53 IST   |   Update On 2024-01-23 14:30:00 IST
  • சவுகார்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் கன்வர்லால் குழும தொழில் அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
  • சோதனையின்போது வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை:

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கன்வர் லால் குழுமத்துக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

சவுகார்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் கன்வர்லால் குழும தொழில் அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று நள்ளிரவு 11 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News