தமிழ்நாடு செய்திகள்

மரக்காணத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் மேலும் 3 பேர் கைது

Published On 2023-05-15 14:00 IST   |   Update On 2023-05-15 15:02:00 IST
  • விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 15 பேர் பலியானார்கள்.
  • சாராய வியாபாரிகளை பிடிக்க 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 15 பேர் பலியானார்கள். நேற்று 3 பேர் பலியாகி இருந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டார். மற்ற சாராய வியாபாரிகளை பிடிக்க 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ஆறுமுகம், முத்து, ரவி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News