தமிழ்நாடு

பாறை விழுந்ததில் வீடு சேதமானதை படத்தில் காணலாம்.

களியக்காவிளை அருகே கனமழையால் பாறை விழுந்து வீடு சேதம்

Published On 2023-10-15 07:44 GMT   |   Update On 2023-10-15 07:44 GMT
  • வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
  • பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.

களியக்காவிளை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக ஆறுகள், குளங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் அடுத்த தோப்புவிளை பகுதியில் ஆனந்த் என்பவரது வீட்டில் அருகில் இருந்த பெரிய பாறாங்கல் உடைந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி கடும் சேதம் அடைந்தது.

பாறை உடைந்து விழுந்த நேரத்தில் வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.

Tags:    

Similar News