ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு தொடர்ந்து 4 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தன.
- நீர்வரத்தால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
ஒகேனக்கல்:
கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்ட உபரிநீர்- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரத்தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு தொடர்ந்து 4 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 3039 கன அடி நீர் வெளியேற்றப்பட்டன.
இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இந்த நீர்வரத்தானது நள்ளிரவு முதல் வரத்தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.