ஒகேனக்கல்லில் நீர்வரத்து 200 கனஅடியாக நீடிப்பு
- 4-வது நாளான இன்றும் ஒனேக்கல்லுக்கு 200 கனஅடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.
- மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகம் குறைந்துள்ளது.
ஒகேனக்கல்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 4-வது நாளாக 200 கன அடியாக நீடித்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து 4-வது நாளான இன்றும் ஒனேக்கல்லுக்கு 200 கனஅடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.
தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி பறைகளாக காட்சியளிப்பதுடன் சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.