தமிழ்நாடு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2022-12-14 03:57 GMT   |   Update On 2022-12-14 03:57 GMT
  • அஞ்செட்டி, கேரட்டி, பிலிகுண்டுலு உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
  • ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

பென்னாகரம்:

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணரா ஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.

மேலும் அஞ்செட்டி, கேரட்டி, பிலிகுண்டுலு உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News