தமிழ்நாடு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக சரிவு

Published On 2022-11-22 03:55 GMT   |   Update On 2022-11-22 03:55 GMT
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
  • ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

பென்னாகரம்:

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.

இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 9,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News