தமிழ்நாடு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக சரிவு

Published On 2022-12-23 03:43 GMT   |   Update On 2022-12-23 03:43 GMT
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
  • தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பென்னாகரம்:

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.

இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்து ள்ளது.

இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News