தமிழ்நாடு

ராமேசுவரத்தில் சூறைக்காற்று- மீனவர்கள் மீன்பிடிக்க இன்று திடீர் தடை

Published On 2022-08-06 04:12 GMT   |   Update On 2022-08-06 04:12 GMT
  • வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
  • ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 1500 விசைப்படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பாக் ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.

இதனால கடல் சீற்றமாக உள்ளது. இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று திடீர் தடை விதித்தனர்.

இதைத் தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 1500 விசைப்படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடை காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள், 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாததால் ரூ. 3 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News