தமிழ்நாடு செய்திகள்

சிலிண்டர் வாயுவை சுவாசித்து என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2023-10-15 13:56 IST   |   Update On 2023-10-15 13:56:00 IST
  • மதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
  • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவதனசுந்தரத்தின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அடுத்த எஸ்.கே.சி. சாலை முதல் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் மதிவதனசுந்தரம் (31). என்ஜினீயரிங் பட்டதாரி. அவரது தந்தைவுடன் மளிகை கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

சந்திரசேகரனுக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்திரசேகரன் ஈரோடு கரூர் சாலை காந்திஜி வீதியில் தனியாக வசித்து வருகிறார். மதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதிவதனசுந்தரம் கியாஸ் சிலிண்டரில் டியூப் சொருகி, அதனை மூக்கில் வைத்து பின்னர் பிளாஸ்டிக் கவரினை முகத்தில் போட்டு அந்த சிலிண்டர் வாயுவை சுவாசித்து மதிவதனசுந்தரம் தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த சந்திரசேகரன் மகன் இருக்கும் நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மதிவதன சுந்தரத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மதிவதனசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவதனசுந்தரத்தின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News