தமிழ்நாடு

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேந்திர பட்டேலுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2022-12-12 10:04 GMT   |   Update On 2022-12-12 10:04 GMT
  • குஜராத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரலாற்றை படைத்துள்ள உங்களுக்கும், உங்கள் கட்சியினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • உங்கள் தலைமையின் கீழ் குஜராத் தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறேன்.

சென்னை:

குஜராத் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேந்திர படேலுக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் குஜராத் முதல்-மந்திரிக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

குஜராத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரலாற்றை படைத்துள்ள உங்களுக்கும், உங்கள் கட்சியினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பதவி ஏற்பு விழா அழைப்பிதழை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஆவலாக உள்ள போதிலும் 12-ந்தேதி (இன்று) ஏற்கனவே திட்டமிட்ட முக்கிய நிகழ்வுகள் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன்.

தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் குஜராத் தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News