தமிழ்நாடு செய்திகள்

தேவநேயப் பாவாணர் பேத்தி மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2022-11-20 10:37 IST   |   Update On 2022-11-20 10:37:00 IST
  • தேவநேயப் பாவாணர் பேத்தி பரிபூரணம் நேற்று இரவு மரணமடைந்தார்.
  • மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றிய 'திராவிட மொழி நூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் முதுகுத்தண்டு வடப்பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று இரவு மறைவெய்தினார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன்.

அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News