தமிழ்நாடு
பூண்டியில் 718 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி நலத்திட்ட உதவி- கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
- பூண்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
- 718 பயனாளிகளுக்கு ரூ. 2.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வழங்கினார்.
ஊத்துக்கோட்டை:
பூண்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கடரமணா, துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 718 பயனாளிகளுக்கு ரூ. 2.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் வி. ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.