தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரிடம் விசாரணை

Published On 2023-02-15 07:08 GMT   |   Update On 2023-02-15 07:08 GMT
  • கோவை உக்கடம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • திருவண்ணாமலை பகுதியில் நடந்த சோதனையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

திருவண்ணாமலை:

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

கோவை உக்கடம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் பலமுறை சோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 60 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை திருவண்ணாமலை உள்பட தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை பகுதியில் நடந்த சோதனையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

அவர்களை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News