தமிழ்நாடு

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு- காவலில் எடுத்த 5 பேரிடம் 2வது நாளாக விசாரணை

Published On 2022-12-26 07:35 GMT   |   Update On 2022-12-26 07:35 GMT
  • உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 பேரையும் நேரில் அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  • போலீசார் உமர்பாரூக் உள்பட 5 பேரையும் குன்னூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கோவை:

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முகமது அசாரூதின், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று இவர்கள் 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 பேரையும் நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

இன்று 2-வது நாளாக 5 பேரையும் அன்புநகர் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக முபின் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீட்டில் அடிக்கடி சந்தித்து கூட்டங்களை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உமர்பாரூக் உள்பட 5 பேரையும் குன்னூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News