தமிழ்நாடு

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் தமிழக வீராங்கனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2023-05-17 20:08 GMT   |   Update On 2023-05-17 20:08 GMT
  • எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்துகள்.
  • பயணத்தை முடித்த பின்பு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்ற பெற தமிழக வீராங்கனை முத்தமிழ்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்துகள் என்றும் பயணத்தை முடித்த பின்பு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி அவர்கள்.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன்.

எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News